டெல்லி சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து 13 அம்ச கோரிக்கைகளை அவரிடம் வழங்கினார். இதுகுறித்து மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி டோஸ் தேவை என்பதால் கூடுதலாக ஒதுக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார். மேலும் கோவையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார்.
அதுமட்டுமில்லாமல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை, 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவரிடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து இன்று பிற்பகல் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவர் அலுவலகத்திற்கு சென்று சந்தித்த மா. சுப்ரமணியன் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதுகுறித்து பரிசீலனை செய்வதாக தன்னிடம் ஒன்றிய அமைச்சர் கூறியதாக ஹலோ தெரிவித்திருந்தார்.