குட்டை தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்கனவரம் பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா, கீர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுமிகளும் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது இரண்டு சிறுமிகளின் ஆடைகளும் அப்பகுதியில் இருக்கும் குட்டை கரையில் கிடந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் பொது மக்களின் உதவியோடு குட்டைக்குள் இறங்கி தேடிப் பார்த்த போது கல்பனா, கீர்த்தி இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்துள்ளது.
அதன் பிறகு அவர்கள் 2 சிறுமிகளின் சடலத்தையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமிகளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.