Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தனியாக அழைத்த சிறுவன்…. சிறுமிக்கு நடந்த தொந்தரவு…. போக்சோ சட்டத்தில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் அருகில் ஒரு கிராமத்தில் 8 வயது சிறுமி வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |