பேருந்தில் ஏறிச் சென்ற மூதாட்டி அணிந்திருந்த தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் சுப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சந்திராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திராவதி தனது கழுத்தில் 6 பவுன் தங்க சங்கிலியை அணிந்துக்கொண்டு தூத்துக்குடி செல்வதற்கு பேருந்தில் ஏறிய போது அதில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.
இதனையடுத்து சந்திராவதி சிறிது தூரம் சென்றதும் தனது கழுத்தை திடீரென தொட்டுப் பார்த்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கூட்டத்தில் யாரோ ஒரு மர்ம நபர் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சந்திராவதி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.