சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சாலை, நடைபாதை, அரசு அலுவலர்களின் கட்டுமான பணிகளின் தரத்தை பரிசோதனை செய்வதற்கு சென்னையை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அரசு அமைக்கும் சாலைகள் ஆறு மாதங்கள் கூட நீடிப்பதில்லை. அதிகாரிகள் ஆய்வு செய்வதும் இல்லை என்று மனுதாரர் குற்றம் சாட்டி இருந்தனர். மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
சாலைகள், கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக உள்ள விதிமுறைகளை அமல்படுத்த வலியுறுத்தி இருந்தனர். சாலை அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்பிறப்பிக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது என கூறிய நீதிபதிகள், குடி மக்கள் விழிப்புணர்வுடன் அதிகாரிகளையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் கேள்வி கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர். சுதந்திரமாகி 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை என்றும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வில்லை என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.