Categories
மாநில செய்திகள்

குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள்…. குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி…!!!

திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் சம்பவத்தன்று அங்கு உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்ற போது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கியுள்ளனர்.

இதில் அதிதா(14), ஜீவிதா(14),  ஜோதி(10), சுமதி(38), சுகந்தி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |