Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள் …. கூலி தொழிலாளி பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

இருசக்கர வாகனங்கள்  நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் .

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு  பெரியார் தெருவை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவர் கூலி தொழிலாளி செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில்  தொட்டிக்கலை நோக்கிச் சென்ற போது, எதிரே  வேகமாக வந்த பதிவு எண்  இல்லாத இரு சக்கர வாகனம் ஒன்று  வெற்றிவேந்தன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் தடுமாறி கீழே விழுந்த வெற்றிவேந்தனுக்கு  தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |