Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் மாற்றங்கள்… மத்திய அரசு அறிவிப்பு…!!!

மருத்துவப் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ தகுதித்தேர்வு நீட். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் விண்ணப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு மாலை 5 மணி முதல் விண்ணப்பபிக்கலாம் என்ற நிலையில் அதிக அளவிலான மாணவர்கள் பதிவு செய்ய முயற்சி செய்ததால் ஆன்லைன் விண்ணப்பதிவு முடங்கியது. மேலும் தேர்வு மையங்கள் 165ல் இருந்து, 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நேரமும் மதியம், 3:30 மணி முதல், இரவு, 7:00 மணி வரை இருந்தது, தற்போது, மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை மாற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |