Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காணாமல் போன வாலிபர்…. கிடைத்த அதிர்ச்சி தகவல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காணாமல் போன வாலிபர் சுடுகாட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியதெள்ளூர் பகுதியில் பைரவன் என்ற தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவிந்தரெட்டி பாளையம் சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் காணாமல் போன பைரவன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பைரவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின் அவரது சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பைரவன் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |