மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசிவருகிறார். அப்போது, அவர் பேசியதாவது, கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும். பேனர் வைப்பது விளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன. திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி. இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது.
மேலும் இந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்காகவும் திமுக தயாராக இருக்கிறது. இந்தி குறித்த மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியதுபோல் உள்ளது. மோடிக்கும், அமித்ஷாவுக்கு தாய்மொழி இந்தி அல்ல. பிறகு எதற்காக இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.