பெண்களுக்கு கட்டணம் இன்றி டிக்கெட் வழங்கப்பட்டு இலவசமாக பயணம் செய்கின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் நகரம் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்காக அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த மே மாதத்தில் இருந்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 288 அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பேருந்தின் முன்புறம் இது குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலவசமாக பயணிக்கும் பெண் பயணிகளை கணக்கீடு செய்யும் வகையில்கட்டணம் இல்லாத டிக்கெட்டை அச்சிட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா டிக்கெட் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. எனவே நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்ற பேருந்துகளில் இந்த கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்பட்டது. இதேபோன்று மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் உதவியாளர், திருநங்கைகள் போன்றோருக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு இலவசமாக பயணிக்கின்றனர்.