Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி திறப்பு எப்போது…? – அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் பாடங்கள் ஆன்லைன் வழியாக  நடத்தப்படுகிறது. இதற்கு மத்தியில் கொரோனா அச்சுறுத்தல்  காரணமாக அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 10, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியைத் தொடர்வதற்கு கல்லூரியில் சேர வேண்டும்.

மேலும் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் வீட்டிலிருந்தே படித்து வருவதால் கல்லூரி எப்போது தொடங்கும்? என்று எதிர்பார்த்து கொண்டிருக்கினறனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதலமைச்சர் முடிவு செய்வார் என்றும், கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆகஸ்டு 1ஆம் தேதி திட்டமிட்டபடி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |