வெளிநாடு சென்று வந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சரண்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வெளிநாடு சென்று வந்த ஆறுமுகம் கபிஸ்தலம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் ஆறுமுகம் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி பதற்றம் அடைந்தார். அதன்பின்னர் அவரது மனைவி ஆறுமுகத்தை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனையடுத்து திருமலைராஜன் ஆற்றங்கரை பகுதியில் தேடி பார்த்தபோது அருகிலுள்ள மரத்தில் ஆறுமுகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாபநாசம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.