நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கரவாகனம் மோதி நடத்த விபத்தில் 2 பேர் பலத்தகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் நாகராஜ்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் மற்றும் அவரது மகன் பிரபு(30) நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ஜோடர்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து வேலையை முடித்து விட்டு மீண்டும் அம்மாபேட்டைக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து ஜோடர்பாளையத்தை அடுத்துள்ள ஜமீன்இளம்பள்ளி அருகே சென்றுகொண்டிருக்கும்போது முன்னாள் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றதில் டிராக்டர் மீது இடித்து நாகராஜ் கீழே விழுந்துள்ளார்.
மேலும் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீதும் மோதியுள்ளது. அதில் நாகராஜ் மகன் பிரபு மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தியாகு என்பவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதியில் 3 பேரையும் மீட்டு திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதனைத்தொடர்ந்து பிரபு மற்றும் தியாகுவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜோடர்பாளையம் போலீசார் டிராக்டர் ட்ரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.