Categories
மாநில செய்திகள்

தற்காலிகமாக பணிபுரியும் இவர்களுக்கு…. 1 மாதத்தில் பணி நிரந்தரம்…. அரசு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. மேலும் கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும், பெண் அர்ச்சகர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரிவர்களின் பணி, ஒரு மாதத்திற்குள் நிரந்தரம் செய்யப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |