Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிக வெயில் – குளிர் காரணமாக…. 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் வருடம் தோறும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக குளிர் காரணமாக 7 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் தி லேன்செட் பிளானட்டரி ஹெல்த்’ என்ற பத்திரிக்கையில் வெளியானது. இதில் தெரிவித்துள்ளதாவது உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இழப்புகள் வெப்பநிலை காரணமாக நிகழ்வதாக தெரிவித்துள்ளார்.

2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரை எல்லா பிராந்தியங்களிலும் வெப்பநிலை அதிகரித்து வந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதிக அளவிலான உயிரிழப்புகளுக்கு இது காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அசாதாரண குளிரால் ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் உயிரிழக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் காரணமாக 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |