Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

என்ன நடந்துருக்கும்… நண்பரின் வீட்டிற்கு சென்றவர்… மர்மமான முறையில் உயிரிழப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காரில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புளிக்காரத்தெருவில் பத்மநாபன்(43) என்பவர் வசித்துவந்துள்ளார். இவர் சொந்தமாக தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்பநாபன் அவரது நண்பரை பார்க்க பாரதிநகருக்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து இவர் நேற்று காலையில் அதே பகுதியில் காரில் இருந்த படியே மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து அவரது சகோதரனான ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவர் காரில் இருந்த பத்பநாபனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |