இந்நிலையில் சுபஶ்ரீ மறைவுக்கு முக ஸ்டாலின் சமூக வலைத்தளங்களில் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? என்று ஆதங்கத்துடனும் வேதனையுடனும் பதிவிட்டுள்ளார்.
Categories
அரசின் அலட்சியம்… இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?…. முக ஸ்டாலின் கண்டனம்..!!
