மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற வன அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கே.டி.சி நகரில் சொரிமுத்து என்ற ஓய்வு பெற்ற வன அலுவலர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சொரிமுத்து சீனிவாசநகர்-ரெட்டியார்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக சொரிமுத்தின் மோட்டார் சைக்கிள் மோதி விட்டது.
இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சொரிமுத்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.