Categories
மாநில செய்திகள்

15 அணைகளை சுற்றுலாத் தலமாக மாற்ற….தமிழக அரசு அதிரடி முடிவு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 15 அணைகளை சுற்றுலா தலமாக மாற்ற சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் சுற்றுலா தோட்டக்கலை துறை இயக்குனர், அணைகள் பாதுகாப்பு இயக்க தலைமை பொறியாளர் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அணைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது.

Categories

Tech |