Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டான்… பதறிய பெற்றோர்… சிறுமியை மீட்ட போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கவுதம்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கவுதம் திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதியளித்து சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியும் கவுதம் கூறியதை நம்பி அவருடன் சென்றுள்ளார். இதனையறிந்த பெற்றோர் பதறியடித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் கவுதம் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மகளிர் போலீசார் கவுதமை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியையும் மீட்டுள்ளனர்.

Categories

Tech |