Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம்…. அரசு செம மாஸ் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக 20 லட்சம் நீரழிவு, ரத்த அழுத்தம் உடைய பொதுமக்களுக்கு வீடு தேடிச் சென்று மாத்திரைகள் கொடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |