Categories
மாநில செய்திகள்

நடிகையை ஏமாற்றிய வழக்கில்… EX மினிஸ்டருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன்….!!!

நடிகையை ஏமாற்றிய வழக்கில் எக்ஸ் மினிஸ்டர் மணிகண்டனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் இரண்டு வாரங்களுக்கு அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் மணிகண்டனுக்கு நிபந்தனை விதித்து உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Categories

Tech |