Categories
தேசிய செய்திகள்

ப்பா… இந்த சின்ன வயசுல இப்படி ஒரு திறமையா…? “10 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு”… குவியும் பாராட்டு..!!!

வீட்டில் உள்ள காய்கறி கழிவுகளை வைத்து 10 வயது சிறுமி பேப்பர் தயாரித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உலக நாடுகளும் மறுசுழற்சி முறையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மறுசுழற்சி முறை, தான் இந்த உலகில் நம்மை நீண்டகாலம் வாழ வைக்கும். இயற்கை வளங்களை அழித்து தான் நாம் நிறைய பொருட்களை தயாரிக்கிறோம். இது நமது எதிர்காலத்திற்கு மிகவும் ஆபத்தாக அமையும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மறுசுழற்சி முறை முக்கியமாக மாறி வரும் சூழலில் 10 வயது சிறுமி ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த மான்யா ஹர்ஷா என்ற 10 வயது சிறுமி தனது வீட்டில் கிச்சனில் உள்ள காய்கறி கழிவுகளை வைத்து வெஜிடபிள் பேப்பரை உருவாக்கியுள்ளார். வீணாகும் காய்கறிகளை வைத்து உபயோகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த மான்யா ஹர்ஷா வீட்டில் மீதமாகும் காய்கறிகளை வைத்து பேப்பரை தயாரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள செடிகளை வைத்தும் பேப்பர் தயாரித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “ஆயிரம் பவுண்ட் பேப்பர் தயாரிப்பதற்கு நாம் எட்டு மரங்களை வெட்ட வேண்டியுள்ளது. மரங்கள் நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இயற்கை வளங்களை ஒவ்வொரு நாளும் அழித்து நாம் ஒரு பொருளை தயாரிப்பதை காட்டிலும், இதுபோன்ற மறுசுழற்சி முறையை பயன்படுத்தி பேப்பரை தயாரிக்க முடியும். எட்டு முதல் பத்து வெங்காய இதழ்களை கொண்டு நாம் இரண்டு முதல் மூன்று பேப்பர் தயாரிக்க முடியும்.

0.5 கிலோ பட்டாணி தோல்களைக் கொண்டு 3, 4 பேப்பர் தயாரிக்க முடியும். இந்த பேப்பர் கலராக இருக்கும். ஆனால் இதை கொண்டு நாம் எழுதலாம், வரையலாம், சாதாரண பேப்பர் எப்படி பயன்படுத்துகிறோமோ அதே போல் இதையும் பயன்படுத்தலாம்” என்றுகூறுகிறார் . இந்த பத்து வயது சிறுமி இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு இதைக் கண்டுபிடித்துள்ளார். இவரின் செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |