பெலகாவியில் என்ற பகுதியில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவியில், போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பசவனஹள்ளி பகுதியை சேர்ந்த ஜோதி என்பவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வீடு கட்டும் பணியை செய்து வந்த லட்சுமிகாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் இவர்கள் இருவரும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜோதி வீட்டை விட்டு வெளியேறி லட்சுமிகாந்தை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த இரண்டு குடும்பத்தினரும் அவருக்கும் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். பின்னர் கணவர் வீட்டில் ஜோதி வசித்து வந்தார். ஆனால் லட்சுமிகாந்தின் குடும்பத்தினர் ஜோதியின் ஜாதி பெயரை கூறி அவரை கடுமையாக திட்டியதாக தெரிகிறது. இதனால் தனது கணவருடன் வேறு வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். மேலும் லட்சுமிகாந்த் வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு வந்து ஜோதிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.