Categories
மாநில செய்திகள்

நாளை முதல் சுற்றுலாத்தலங்கள் மீண்டும் மூடல்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து 75 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தற்போது மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் நாளை முதல் மீண்டும் சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |