Categories
தேசிய செய்திகள்

“கணவன் கிராமத்திற்கு தலைவியான மணமகள்”… தனது செல்வாக்கை நிரூபிக்க ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மணப்பெண்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் வீட்டிற்கு மணமகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பதான் நகர பாஜக துணைத் தலைவராக இருப்பவர் வேத்ராம் லோதி. இவரின் மகள் சுனிதா. இவருக்கும் மாவட்டத்தை பரேலி மாவட்டத்தின் ஆலம்பூர் கோட் கிராமத்தை சேர்ந்த ஒமேந்திர சிங் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் பதிவு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சுனிதா தனது கணவரின் கிராமத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அந்த ஊரின் வாக்காளராக இருந்தால் மட்டுமே போட்டியிட முடியும் என்பதற்காகவே, டிசம்பரில் இந்த திருமணம் நடைபெற்றது.

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தாலும் சுனிதா தனது தந்தை வீட்டிலேயே இருந்தார். ஒமேந்திர சிங்கும் தனது மனைவிக்காக பிரச்சாரம் செய்யவில்லை. இருப்பினும் அந்த கிராமத்தில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது சுனிதாவுக்கு அவரது கணவர் ஒமேந்திர சிங்கும் இந்து முறைப்படி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதற்காக மணமகன் வீட்டிற்கு வந்த சுனிதா ஹெலிகாப்டர் ஒன்றில் வந்து இறங்கினார். கணவரின் கிராமத்திற்கு தலைவியாக இருப்பதாலும், தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக ஹெலிகாப்டரில் கணவன் வீட்டிற்கு வந்து இறங்கிய சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Categories

Tech |