வாய்க்கால் கரையில் ஏற்படும் மண் சரிவை தடுத்து தரைப்பாலம் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடியிலிருந்து மன்னஞ்சி செல்லும் சாலையின் இடையே பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் இருக்கின்றது. இந்தப் பாசன வாய்க்கால் மூலம் பெரியகொத்தூர். சின்னகொத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இந்நிலையில் பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் குறுகலாக இருப்பதால் தண்ணீர் அதிகளவு செல்லும்போது கரையில் உள்ள மண் சரிந்து விழுந்து காரையின் மேல்பகுதியில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்படுகிறது. இதனால் வாய்க்காலில் அதிகம் தண்ணீர் வரும்போது சாலையின் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மண் சரிவை தற்போது அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் தற்காலிகமாக கவணை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
இதனையடுத்து கரையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு தடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள கவணையால் வாய்களில் வரும் தண்ணீர் முழுமையாக விவசாய நிலங்களுக்குள் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. ஆகவே ஒவ்வொரு ஆண்டு விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதன்பின் பெரியகொத்தூர் பாசன வாய்க்கால் கரையில் மண் சரிவை தடுத்து தடுப்புசுவர் மற்றும் பாசன வாய்க்கால் குறுக்கே தண்ணீர் செல்லும் வகையில் தரைப்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.