கிணற்றில் தவறி விழுந்து 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது .
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை தெருவை சேர்ந்த ஞானவேல் என்பவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவனுடைய 11 வயது மகன் கோபாலகிருஷ்ணன் ஆனந்தபுரம் நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.இந்நிலையில் கோபாலகிருஷ்ணன அவருடைய அண்ணன் பார்த்திபன் மற்றும் நண்பர் ஆகிய 3 பேரும் பாலாஜி நகரில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்றனர். இந்நிலையில் கிணற்றில் இறங்கியபோது கோபாலகிருஷ்ணன் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கிணற்றில் இறங்கி சிறுவனை தேடி பார்த்தனர்.
ஆனால் சிறுவன் கிடைக்காததால் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின்படி ஆரணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பிணமாக மீட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது .