Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பில் இப்படி பண்ற…. வசமா சிக்கிய வாலிபர்…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

ஆன்லைன் வகுப்பின்போது மாணவியின் பெயரில் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் மாணவி ஒருவரின் பெயரில் வாலிபர் ஒருவர் இணைந்து அவர் தனது செல்போனில் இருந்து வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கும், பாடம் பயிலும்மாணவிகளுக்கும் ஆபாச செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு குரூப்பில் இணைந்து இருந்த அந்த செல்போன் எண்ணை பள்ளி நிர்வாகம் நீக்கியபின் தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் 29-ஆம் தேதி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் அளித்தனர்.

அதன்பின் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, சைபர் செல் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி வீராச்சிகுப்பம் பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்பவர் பள்ளி ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி மற்றும் படம் அனுப்பியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் மோகன்குமாரை கைது செய்து பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆன்லைன் வகுப்புகளின் போது பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு விழிப்புணர்வுடன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் முறையாக தணிக்கை செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |