Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு குடிநீர் வேண்டும் ….. காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் …. தி.மலையில் பரபரப்பு …!!!

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பே கோபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தப் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பே கோபுரம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கையில் பெரிய கம்புகளை வைத்து சாலையை மறைத்தபடி தடுப்பு அமைத்து காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ,நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்தப் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் .இதனால் அங்கு  அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |