நாமக்கல் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டுகளை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அதிரடி இடமாற்றம் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் 26 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. அனைத்து காவல் நிலையத்திலும் தனிப்பிரிவுக்கு என போலீஸ் ஏட்டு பணிபுரிந்து வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் தினசரி நடைபெறும் ஆர்ப்பாட்டம், கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை சேகரித்து வாரத்தில் ஒரு முறை சூப்பிரண்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி காவல்துறையினருக்கு அறிவுரை வழங்குவார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் போலீஸ் ஏட்டு அவர்களுக்கான கூட்டம்சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் நடைபெற்றுள்ளது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்ற செயல்களை கேட்டறிந்துள்ளார். மேலும் மாவட்டத்தில் பணியாற்றும் 26 போலீஸ் ஏட்டுகளை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலேயே வெவ்வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.