Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“என்ன நடந்ததுன்னு தெரியல” கதறிய தாய்… மகன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள ஒப்பனையாள்புரம் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 25 வயதுடைய முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் தாய் தனது மகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.

அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து மயங்கிய நிலையில் கிடந்த முத்துக்குமாரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு முத்துக்குமாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |