Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தியவர்களில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு செல்லும் போதே இரண்டு லாரி மற்றும் ஒரு வேனில் அரிசி மூடைகள் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்தனர்.

அதன்பின் அதிகாரிகளை பார்த்ததும் அங்குள்ளவர்கள் தப்பி  ஓடினர். இதனையடுத்து காவல்துறையினர் தனியார் கிடங்கியை வாடகைக்கு பிடித்திருந்த மானாமதுரையில் வசிக்கும் செல்லப்பாண்டி என்பவரையும், தப்பி ஓடியவர்களில் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் அரிசிகள் கடத்துவது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் வாகனங்களில் ஏற்றி வைத்துள்ள 257 மூடை ரேஷன் அரிசி, கிடங்கியில் பதுக்கி வைத்திருந்த 30 மூட்டை ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்லப்பாண்டி மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  மேலும் அரிசி கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |