Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடந்து வரும் குற்றம்… போலீசார் அதிரடி நடவடிக்கை… டிராக்டர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டரில் மணல் அள்ளிவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் பலுவா ஊருணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து டிராக்டரை ஓட்டி வந்த தனுஷ்பாண்டி(22) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணல் அள்ளிவந்த டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |