ராமநாதபுரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. தினந்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் முற்றிலுமாக நீக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆலோசகர் முனியாண்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் உதயகுமார், தலைவர் ஜாபர் அலி, சாயல்குடி நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ஷேக் அப்துல்லா உட்பட பல நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.