Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிரந்தரமாக மூட வேண்டும்… மத்திய மாநில அரசை கண்டித்து… தாய் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தாய் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் பரமக்குடியில் மத்திய, மாநில அரசை கண்டித்து தாய் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதற்கு மாநில அமைப்பு செயலாளர் முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் திருப்பதி, கட்சியின் நிறுவனத் தலைவர் பாண்டியன், பொது செயலாளர் செல்வம், உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி நிர்வாகிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |