Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  சந்தேகத்திற்கு இடமான வகையில் பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் சிவகாசி பகுதியில் வசிக்கும் அய்யனார் என்பதும் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அய்யனாரை கைது செய்து அவரிடம் இருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |