Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காய்கறிகள் நஞ்சு இன்றி உற்பத்தி செய்ய…. இப்படி பண்ணுங்க…. வேளாண் விஞ்ஞானியின் அறிவுரை….!!

நஞ்சு இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு வீடுகளில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தினார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் வேளாண்மை அறிவியல் வளாகத்தில் சத்து கொடுக்கும் காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து பயிற்சி இணையதளத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதனை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். திருவள்ளுவர் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான சாந்தி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியபோது சத்து பற்றாக்குறை என்ற நோயை போக்குவதற்கு ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டங்களை வீடுகளில் அமைக்க வேண்டும் என்று சாந்தி கூறியுள்ளார்.எனவே உணவு உற்பத்தி குறைவாக இருந்ததால் தான் பசுமை புரட்சி ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காததால் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி போன்றவை ஏற்படுகிறது. இதனால் உடல் சத்து குறைந்து தோல்கள் சுருங்கி சிறு குழந்தைகள் வயதானவர்கள் போல் தெரிவார்கள்.

அதன்பின் தண்ணீர் குடிக்கும் போது கை விரல்கள் நீரில் படக்கூடாது என்றும் சிறிய இடத்தில் வீடு இருந்தாலும் நிலையான சத்துணவு தரும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்போதுதான் ரசாயனம் இல்லாத காய்கறிகளை உற்பத்தி செய்து உன்ன முடியும் என்று சாந்தி தெரிவித்துள்ளார். இதில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ராதாகிருஷ்ணன், ஜெகதீசன், செல்வம்முருகன், சபாபதி, உதவி பேராசிரியர்கள் புனிதா, கமலசுந்தரி மற்றும் திருவள்ளூர், திருவாரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |