Categories
உலக செய்திகள்

அவர் வாய் தவறி சொல்லிட்டாரு..! சர்ச்சையை கிளப்பிய பேச்சு… தகவல்துறை அமைச்சர் விளக்கம்..!!

கடந்த வருடம் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தியாகி என்று கூறியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது அந்நாட்டு தகவல் துறை அமைச்சர் அது குறித்து விளக்கம் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடம் என கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்கா ஒரு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதற்கு பதிலளிக்கும் வகையில் பின்லேடனை அமெரிக்கர்கள் அப்போட்டாபாத்தில் வைத்து கொலை செய்துள்ளனர். பின்லேடன் ஒரு தியாகி. இவ்வாறு தமது நாட்டிற்குள் புகுந்து ஒருவரை கொலை செய்திருப்பது நமக்கு மிகப்பெரிய அவமானம் என்றும் கூறியதால் உலக அளவில் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் அந்நாட்டின் மத்திய அமைச்சர் பாவத் சவுத்ரி ஐ.நா.வில் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்து வாக்களித்ததை சுட்டி காட்டி உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் ஐ.நா. சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் அல்கொய்தா பயங்கரவாதிகள் மற்றும் ஒசாமா பின்லேடனை சேர்த்ததை ஆதரித்ததாக கூறியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தியாகங்கள் அதிகமாக செய்துள்ளதாகவும், அல்கொய்தாவை பயங்கரவாத இயக்கமாக பாக்கிஸ்தான் கருதுவதாகவும், பின்லேடனை வாய் தவறி இம்ரான்கான் தியாகி என்று கூறிவிட்டார் என்றும் உள்ளூர் ஊடகங்களுக்கு பாகிஸ்தான் மத்திய அமைச்சர் பாவத் சவுத்ரி விளக்கம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |