Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

2,21,50,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு …. நடைபெறும் தீவிர பணி…. பொதுமக்களின் தகவல்….!!

பாலம் கட்டுவதற்கு பாரத பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாடி என்ற பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் அகலம் குறைவாக காணப்பட்டதால் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ மட்டும் சென்று வந்தது. ஆனால் தற்போது இந்த பாலம் பழுதடைந்ததாலும், வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணத்தாலும் புதிய பாலம் கட்டுவதற்கு கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மாவட்ட நிர்வாகமும் பாலம் கட்டுவதற்கு பாரதப் பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து பழைய பாலத்தின் அருகில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

எனவே ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் பில்லர்கள் மேலே எழுப்பப்பட்டதால் தற்போது கோரையாற்றில் தண்ணீர் போகும் போதே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன்பின் மீதி இருக்கும் பணிகளை முடித்து பாலத்தை போக்குவரத்திற்கு திறந்து விட்டால் பெரம்பூர், முல்லைவாசல், மேலாளவத்தசேரி போன்ற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதன்மூலம் பயன் பெறுவார்கள். இந்தப் புதிய பாலம் கட்டப்பட்டால் ஆம்புலன்ஸ், வேன் போன்றவாகனங்கள் விரைவில் நீடாமங்கலம், மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அருகில் உள்ள கிராமங்களில் சாலைகள் அகலமான தார் சாலைகளாக ஏற்படுத்தப்பட்டால் பேருந்துகள் இயக்கவும் வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Categories

Tech |