Categories
ஆன்மிகம் இந்து

மற்றவர்களிடமிருந்து இதையெல்லாம் கடனா வாங்காதீங்க… வறுமை உங்களை தேடி வரும்… கவனமா இருங்க…!!!

எந்த பொருட்களை நாம் கடனாக வாங்க கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கடன் வாங்குவது என்பது முந்தைய காலத்தில் இருந்து, தற்போது வரை நடைமுறையில் உள்ள ஒரு பழக்கம்தான். ஒருவருக்கு பண கஷ்டம் ஏற்படும் பொழுது கடனாக வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தருவது தவறு ஒன்றும் இல்லை. ஆனால் எந்த பொருள்களை கடன் வாங்குகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில பொருள்களை நாம் கடனாக வாங்கும் போது அது வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.

மற்றவர்களிடமிருந்து கடிகாரத்தை கடனாக வாங்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையில் வறுமையும், தோல்வியையும் ஏற்படுத்தும். அதே போல் ஒருவரிடம் பேனாவை வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்காமல் இருந்து விடாதீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் அல்லது உறவினர்களிடம் இருந்து ஆடைகளை வாங்கி போடாதீர்கள். பொருளாதார பிரச்சினையை உண்டாக்கும். குளியல் சோப்பு களையும் கடனாக வாங்க கூடாது.

Categories

Tech |