வாலிபர் தனது நண்பர்களுடன் இணைந்து செல்போன் கடைக்காரரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷின் கடைக்கு சென்ற அதே பகுதியில் வசிக்கும் யுவராஜ் என்ற வாலிபர் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த செல்போனில் இருந்த பழுதை சரியாக பார்க்கவில்லை என்று யுவராஜ் கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த யுவராஜ் தனது நண்பர்களுடன் இணைந்து விக்னேஷை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதன்பின் காயமடைந்த விக்னேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.