Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் பிணமாக கிடந்த… அரசு பேருந்து நடத்துனர்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனர் மர்மமான முறையில் சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தொண்டி கரட்டை கிராமத்தில் செந்தில்குமார்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கந்தம்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் உள்ள மேல்சாத்தம்பூர் என்ற இடத்தில் மர்மமான முறையில் செந்தில்குமார் உயிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் நல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்திலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் நடத்திய விசாரணையில் செந்தில்குமாருக்கு காலையில் ஒரு போன் வந்ததாகவும், இதனையடுத்து அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் மேல்சாத்தம்பூர் பகுதியில் செந்தில்குமார் சென்று கொண்டிருக்கும்போது அப்பகுதியாக வந்த வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |