பட்டியல் இனத்தைச் சேர்ந்த 11900 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளதாவது: சுமார் 11, 900 குடும்பங்களுக்கு 10 லட்சம் வீதம் 1,200 கோடி நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பட்டினத்தை சேர்ந்த நலிவுற்ற பிரிவினர் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பத்துலட்சம் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 119 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டில் பட்டியல் வகுப்பினர் மேம்பாட்டுக்கு தெலுங்கானா அரசு 40,000 கோடி செலவிடும் என தகவல் வெளிவந்துள்ளது.