Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில்களில் இன்று முதல் இதற்கு தடை…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஜூலை-5 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் கோவில்கள் திறக்கப்படுவதால்  அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் தடை தொடரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருநீறு, குங்குமம் தட்டில் வைத்து வழங்கப்படும். மேலும் அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பணியாளர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |