சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆறு காவலர்கள் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவரை சம்பவத்தன்று கடத்தி சென்று பண்ணை வீட்டில் கட்டிவைத்து சொத்துகளை காவல்துறை அதிகாரிகள் எழுதி வாங்கியதாக புகார் எழுந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இது குறித்து சிபிசிஐடி போலிஸ்ற் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருமங்கலம் உதவி ஆணையர் சிவகுமார், ஆய்வாளர் சரவணன் பாண்டியராஜன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Categories
FLASH NEWS: 6 போலீஸ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு…!!!
