கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் “கோவாக்சின்” தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் அவசரகால அனுமதியை அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் தடுப்பூசியை அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சினை அவசரகால தடுப்பூசியாக அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மருந்து கழகத்தின் இயக்குனர் கூறியதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி குறித்த அனைத்து விதமான சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால் இந்த கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம் என்ற அறிவிப்பை பிலிப்பைன்ஸ் வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.