Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு… பயன்பாட்டிற்கு வந்த மின்மாற்றி… நன்றி தெரிவித்த பொதுமக்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஆர் நகர், ராஜா நகரில் மின்னழுத்த குறைபாடு பிரச்சனையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்த மேற்பார்வை பொறியாளரான சகாயராஜ் அப்பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவ உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரின் மேற்பார்வையில் வாணியங்குடி பகுதியில் 100 கிலோ வாட் பவர் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த புதிய டிரான்ஸ்பார்மர் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிவகங்கை மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |