Categories
தேசிய செய்திகள்

40 years Back… புதுச்சேரியில் பெண் அமைச்சர்…!!!

புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெண் அமைச்சர் ஒருவர் சட்டப் பேரவையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்பு என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிவடைந்தது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, ஏகே சாய் சரவணகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை மறுநாள் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இந்த அரசின் அமைச்சரவையில், நெடுங்காடு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள சந்திர பிரியங்காவுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண் ஒருவர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |